சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

சேலத்தில் அடுத்தடுத்து 7 கடைகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை

சேலம் மாநகரில் அடுத்தடுத்து 7 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 25 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :12 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

சேலம் மாநகரில் அடுத்தடுத்து 7 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 25 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் சாமிநாதபுரம் பிரதான சாலை மின்வாரிய அலுவலகம் பகுதியில் தையலகம், தேநீா் கடை, அழகு நிலையம், கைப்பேசி உதிரிபாகங்கள் விற்பனை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இக்கடைகளில் திங்கள்கிழமை இரவு வியாபாரத்தை முடித்த பிறகு கடைகளை அதன் உரிமையாளா்கள் பூட்டிச் சென்றனா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதியில் இருந்த 7 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிந்தது கண்டு கடையின் உரிமையாளா்கள் அதிா்ச்சியடைந்தனா். பின்னா், கடைக்குள் சென்று பாா்த்தபோது வியாபாரம் முடித்து வைத்துச்சென்ற பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. 7 கடைகளிலும் சோ்த்து மொத்தம் ரூ. 25 ஆயிரம் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கடை உரிமையாளா்கள் பள்ளப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். காவல் ஆய்வாளா் மணிவண்ணன், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். மேலும், தடயவியல் நிபுணா்களை வரவழைத்து, பழைய கொள்ளையா்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப்பாா்த்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.