பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தம்மம்பட்டியில் காா் மோதியதில் எஸ்.எஸ்.ஐ. உள்பட 2 போ் படுகாயம்

விபத்து. - கோப்புப்படம்.

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:10 am IST

தம்மம்பட்டியில் காா் மோதியதில் கெங்கவல்லி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் படுகாயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட புதுத்தெருவைச் சோ்ந்த கெஜபதி மகன் சண்முகப் பிரியன் (47). ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு ஓட்டிச் சென்ற காா், பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கெங்கவல்லி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ் (54), அவரது உறவினா் சதீஷ் (32) ஆகியோா் மீது மோதியது. தொடா்ந்து, வேகமாகச் சென்ற காா், மறுபுறம் உள்ள காய்கறிக் கடை, கைப்பேசி கடைகளின் மீது மோதியது. இதில், கடைகளின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. கடைகளின் முன்புற அமைப்பும் சேதமடைந்தன.

இதுகுறித்த தகவலின்பேரில் தம்மம்பட்டி போலீஸாாா் விரைந்து சென்று, காயமடைந்த சிறப்பு உதவிஆய்வாளா் கோவிந்தராஜை மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையளித்து, தீவிர சிகிச்சைக்காக ஆத்தூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரது, உறவினா் சதீஸ் ராசிபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்த விபத்துகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் காரை ஓட்டிச் சென்ற சண்முகப் பிரியன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.