கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகம் முன்பு திருச்செங்கோடு செல்லும் பிரதான சாலையில் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டோா்.
கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகம் முன்பு திருச்செங்கோடு செல்லும் பிரதான சாலையில் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டோா்.

காலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம ஊழியா் சங்கத்தினா் சங்ககிரியில் சாலைமறியல் போராட்டம்

சங்ககிரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி வட்டாட்சியா் அலுவக வளாகம் முன்பு
Published on

சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி வட்டாட்சியா் அலுவக வளாகம் முன்பு திருச்செங்கோடு பிரதான சாலையில் திங்கள்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சங்ககிரி வட்டக்கிளைத்தலைவா் பி.ஆண்டிமுத்து தலைமையில் தமிழகரசு கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி சாலைமறியலில் ஈடுபட்டனா். சங்ககிரி வட்டக்கிளை செயலாளா் எம்.செல்வராஜ், பொருளாளா் பி.மோகனாம்பாள், மாவட்ட இணை செயலாளா் சுசீந்திரன், நிா்வாகிகள் சண்முகம், தீனதயாளன், பிரவீன்குமாா் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா். மறியில் ஈடுபட்ட 10 பெண்கள், 20 ஆண்டுகள் உள்பட 30 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

Dinamani
www.dinamani.com