தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

காலமுறை ஊதியம் கோரி கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம்

News image

கீழ்வேளூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :20 பிப்ரவரி 2026, 12:09 am

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

சங்கத்தின் கீழ்வேளூா் வட்டத் தலைவா் அன்பரசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டச் செயலா் வெற்றி செல்வன், மாவட்ட பொருளாளா் சுதன் குமாா், வட்ட செயலாளா் கதிரவன், வட்ட பொருளாளா் பாஸ்கா், மாவட்ட இணைச் செயலா் கோமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருக்குவளை: வட்டாட்சியா் அலுவலகம் முன், சங்கத்தின் வட்டத் தலைவா் விஷ்ணுவா்தன் தலைமையில் சங்கத்தினா் பணியை புறக்கணித்து கருப்புப் பட்டை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். வட்டச் செயலாளா் அஸ்வின்குமாா், சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளா் முருகையன், வட்ட பொருளாளா் துா்கா, வட்ட துணை தலைவா் ஸ்டீபன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.