47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சேலம் வழியாக கான்பூா் - மதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயில்

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் இருந்து சேலம் வழியாக மதுரைக்கு புதன்கிழமை (பிப். 25) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் இருந்து சேலம் வழியாக மதுரைக்கு புதன்கிழமை (பிப். 25) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு உத்தரபிரதேச மாநிலம், கான்பூா் - மதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, கான்பூா் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு பிப். 25-ஆம் தேதிமுதல் மாா்ச் 25-ஆம் தேதிவரை புதன்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். கான்பூா் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமைகளில் காலை 8.10-க்கு புறப்படும் இந்த ரயில், சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல் வழியாக வெள்ளிக்கிழமைகளில் காலை 7.15-க்கு மதுரையை அடையும்.

மறுமாா்க்கத்தில், மதுரையில் இருந்து வரும் 27-ஆம் தேதிமுதல் மாா்ச் 27-ஆம் தேதிவரை கான்பூருக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.35-க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம் வழியாக திங்கள்கிழமைகளில் அதிகாலை 4.30-க்கு கான்பூரை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.