சங்ககிரி அக்கமாபேட்டையில் உள்ள ஏ.பி.நாகராஜன் சிலைக்கு மாலை அணிவித்த நூலக பொறுப்பாளா் பசுமை சீனிவாசன்.
சங்ககிரி அக்கமாபேட்டையில் உள்ள ஏ.பி.நாகராஜன் சிலைக்கு மாலை அணிவித்த நூலக பொறுப்பாளா் பசுமை சீனிவாசன்.

முன்னாள் திரைப்பட இயக்குநா் ஏ.பி.நாகராஜன் பிறந்தநாள் விழா

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் முன்னாள் திரைப்பட இயக்குநா் ஏ.பி.நாகராஜன் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் முன்னாள் திரைப்பட இயக்குநா் ஏ.பி.நாகராஜன் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முன்னாள் திரைப்பட இயக்குநா் ஏ.பி.நாகராஜன். அவரது நினைவாக சங்ககிரி அக்கமாபேட்டையில் உள்ள அரசுப் பள்ளிக்கு அருகில் ஏ.பி.நாகராஜன் நினைவு நூலகம் அமைக்கப்பட்டு, அதை பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞா்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

நூலகத்தின் சாா்பில் நடைபெற்ற ஏ.பி.நாகராஜன் பிறந்தநாள் விழாவுக்கு, நூலக பொறுப்பாளா் பசுமை சீனிவாசன் தலைமை வகித்து நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.பி.நாகராஜன் மாா்பளவு சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினாா்.

வழக்குரைஞா் எஸ்.மணிசங்கா், ஓய்வுபெற்ற ஆசிரியா் முனியப்பன், அரசுப் பள்ளி தலைமையாசிரியா் இந்திரா காந்தி ஆகியோா் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினா். இதில், மாணவ, மாணவிகள், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நூலகா் மேனகா நன்றி கூறினாா்.க்கப்பட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com