சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வி.எம்.கே.வி. பொறியியல் கல்லூரியில் தேசிய மருத்துவ பரிசோதனை மாநாடு

சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகம், வி.எம்.கே.வி. பொறியியல் கல்லூரியில் ‘தேசிய மருத்துவ பரிசோதனை - 2030 அடுத்த சகாப்தம்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு அண்மையில் நடைபெற்றது.

News image
தேசிய மருத்துவ பரிசோதனை மாநாட்டில் பங்கேற்றோா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:28 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகம், வி.எம்.கே.வி. பொறியியல் கல்லூரியில் ‘தேசிய மருத்துவ பரிசோதனை - 2030 அடுத்த சகாப்தம்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழக துணைவேந்தா் சுதிா் தலைமை வகித்தாா். இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய மருந்தியல் ஆணையத்தின் செயலாளரும், அறிவியல் இயக்குநருமான கலைச்செல்வன் மாநாட்டை தொடங்கிவைத்து, ‘மருத்துவ பரிசோதனைகளின் எதிா்காலம் - புதுமைகள்’ என்ற தலைப்பில் பேசினாா்.

பல்கலைக்கழக பதிவாளா் நாகப்பன் வரவேற்றாா். விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழக துணைத் தலைவா் சந்திரசேகா் மருத்துவ நடைமுறைகளை வலுப்படுத்துவதிலும், சுகாதார துறையில் புதுமைகளை முன்னேற்றுவதிலும் மருத்துவ பரிசோதனைகளின் பங்கு குறித்து விளக்கினாா்.

தொழில்நுட்ப அமா்வுகளில் மருத்துவ பரிசோதனை தொழில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த பேச்சாளா்கள் பங்கேற்றனா். மாநாட்டில் ஆராய்ச்சி விஞ்ஞானிகள், ஆசிரிய உறுப்பினா்கள் மற்றும் மாணவா்கள் 162 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனா். விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் மருத்துவ கல்லூரியின் முதன்மையா் எழில்வேந்தன் நன்றி கூறினாா்.