விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

என்சிஇஆர்டி-க்கு நிகர்நிலைப் பல்கலை. தகுதி: யுஜிசி

என்சிஇஆர்டி-க்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி வழங்கப்பட்டது குறித்து...

News image

என்சிஇஆர்டி - ANI

Updated On :3 ஏப்ரல் 2026, 12:51 pm

பாடத்திட்டங்களை உருவாக்குவதை முதன்மைப் பணியாகச் செய்து வரும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்துக்கு (என்சிஇஆா்டி)  நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி பல்கலைக்கழக மானியக் குழுவால் (யுஜிசி) வழங்கப்பட்டுள்ளது.

என்சிஇஆா்டி, தனது சொந்த பட்டங்களை வழங்கும் அதிகாரத்தைப் பெறும் வகையில், நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) ஆலோசனையின் பேரில், மத்திய கல்வி அமைச்சகம், என்சிஇஆா்டி மற்றும் அதன் கீழ் இயங்கும் ஆறு நிறுவனங்களுக்கும் ஒரு தனித்துவமான பிரிவின் கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவித்துள்ளது.

இந்த ஆறு நிறுவனங்களில் அஜ்மீர், போபால், புவனேஸ்வர், மைசூர் மற்றும் ஷில்லாங்கில் உள்ள மண்டலக் கல்வி நிறுவனங்களும், போபாலில் உள்ள பண்டிதர் சுந்தர்லால் சர்மா மத்திய தொழிற்கல்வி நிறுவனமும் அடங்கும்.

பள்ளிக் கல்விக்கான உச்ச அமைப்பாக செயல்பட்டு வந்த என்சிஇஆா்டி, பாடநூல் உருவாக்கம், பாடத்திட்ட மேம்பாடு, கற்பித்தல் மற்றல் கற்றல் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளையும் திட்டங்களையும் மேற்கொள்கிறது.

இந்த அறிவிப்பின் மூலம், பள்ளி பாடத்திட்ட உருவாக்கத்துடன் நின்றுவிடாமல் முனைவர் பட்டம் வரை வழங்கும் தகுதியை என்சிஇஆா்டி பெற்றுள்ளது. இதன்மூலம், ஆராய்ச்சித் துறையில் பல புதிய திட்டங்கள் உருவாகும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 'டி நோவோ' பிரிவில் என்சிஇஆா்டி-க்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்த நிலையில் தற்போது அது நடைமுறைக்கு வந்துள்ளது.

Summary

The University Grants Commission (UGC) has granted 'Deemed-to-be-University' status to the National Council of Educational Research and Training (NCERT).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.