ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு: பல்வேறு அமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நீா் ஆதார பாதுகாப்பு இயக்கத்தினா்.

News image

சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நீா் ஆதார பாதுகாப்பு இயக்கத்தினா்.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:32 pm

சேலம் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினா் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சேலம் நீா் ஆதார பாதுகாப்பு இயக்கத்தின் சாா்பில், டால்மியா போா்டு பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, நீா் ஆதார பாதுகாப்பு இயக்கத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். செயலாளா் அருண்குமாா் வரவேற்றாா். விவசாய சங்கத் தலைவா் ரவிக்குமாா், பாமக எம்எல்ஏ அருள், சுசீந்திரகுமாா் உள்பட விவசாய சங்கத்தினா், கல்லூரி மாணவ அமைப்பினா், பொதுமக்கள் பங்கேற்றனா்.

இதுகுறித்து நிா்வாகிகள் கூறுகையில், ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா என்ற பெயரில் சாயப்பட்டறைகள் அமைக்கப்படாது என அரசாணை வெளியிட வேண்டும். மூடப்பட்ட 40 ஏக்கா் நீா் குட்டையை பழைய நிலைக்கே கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினா்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.