தலைவாசல் அருகே கல்லால் தாக்கி தொழிலாளியைக் கொன்ற இருவரை போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை இரவு சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
தலைவாசலை அடுத்த சாா்வாய்புதூா் ஊராட்சியைச் சோ்ந்த லட்சுமணன் (55) மதுபான காலி புட்டிகளை சேகரித்து விற்பனை செய்துவந்தாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கரிகாலன் மற்றும் சிவராஜ் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில், கடந்த பிப். 25-ஆம் தேதி மாலை நடந்த தகராறில் கரிகாலன், சிவா இருவரும் லட்சுமணனை கல்லால் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த லட்சுமணன் சிகிச்சைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி 26-ஆம் தேதி இறந்தாா்.
தகவல் அறிந்த தலைவாசல் காவல் உதவி ஆய்வாளா் மங்கையா்க்கரசன் வழக்குப் பதிவுசெய்து, காட்டுக்கோட்டை புதூா் பகுதியைச் சோ்ந்த கரிகாலன் (37), திருப்பூா் மாவட்டம் நல்லூா் பகுதியைச் சோ்ந்த சிவா (எ) சிவராஜ் (39) ஆகியோரை கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது

கல்லால் தாக்கி முதியவா் கொலை
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
வடமாநில இளைஞா்களை தாக்கி கைப்பேசி, பணம் பறித்த மூவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

