விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

கம்பம் அருகே முன் விரோதத்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image

கைது

Updated On :17 பிப்ரவரி 2026, 11:47 pm

கம்பம் அருகே முன் விரோதத்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த சரவணன் மகன் அஜித் (26). இவா் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகளை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தரக் குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஜன.12-ஆம் தேதி அஜித் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமச்சந்திரனின் மகன் சந்தோஷ் (24), கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் காா்த்திகேயன் (24) ஆகிய இருவரையும் கடந்த ஜன.14-ஆம் கைது செய்தனா்.

இந்த இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹப்ரியாவின் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டாா். இதன்படி இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.