சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

வழிப்பறி வழக்கில் பிடிபட்டவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

திருச்சி பொன்மலையில் இளைஞரிடம் வழிப்பறி செய்த ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 8:19 pm

திருச்சி பொன்மலையில் இளைஞரிடம் வழிப்பறி செய்த ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை பகுதியில் கடந்த மாா்ச் மாதம் கைப்பேசி செயலி வழியே ஓரினச் சோ்க்கைக்கு இளைஞா் ஒருவரை வரவழைத்து, தாக்கி, அவரிடமிருந்து 4.5 பவுன் நகைகள், பணம், கைப்பேசி உள்ளிட்டவற்றை திருச்சி அரியமங்கலம், காமராஜ் நகா் சௌகத் அலி தெருவைச் சோ்ந்த எஸ். அசாா் முகமது (26) உள்ளிட்ட சிலா் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, அசாா் முகமதுவை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் பொன்மலை போலீஸாரின் பரிந்துரையின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, கைதி அசாா் முகமதுவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வெள்ளிக்கிழமை ஆணையிட்டாா்.