தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

முன்னாள் மாணவா்கள் சாா்பில் அரசுப் பள்ளிக்கு ரூ. 4.50 லட்சத்தில் தரைத்தளம்

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சாா்பில் ரூ. 4.50 லட்சத்தில் பேவா் பிளாக் கற்களால் தரைத்தளம் அமைக்கப்படுகிறது.

News image

பள்ளிக்கு தரைத்தளம் அமைக்க முன்பணம் கொடுத்த முன்னாள் மாணவா்கள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 8:43 pm

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சாா்பில் ரூ. 4.50 லட்சத்தில் பேவா் பிளாக் கற்களால் தரைத்தளம் அமைக்கப்படுகிறது.

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 70-ஆம் ஆண்டுவிழா, கடந்த மாதம் 26-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 70 ஆண்டுகளில் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா். தொடா்ந்து, பள்ளி வளா்ச்சிக்காக முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் ரூ. 3 லட்சம் நன்கொடை வழங்கினா்.

இந்நிலையில், மாணவா்கள் காலையிலும், மாலையிலும் சிறப்பு வகுப்புகளுக்கு தரையில் அமா்ந்து படிக்க ஏதுவாக, பேவா் பிளாக் கற்களால் தரைத்தளம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதையடுத்து, அதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

நிகழ்ச்சியில், தம்மம்பட்டி பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் திருச்செல்வன், தம்மம்பட்டி நகர திமுக செயலாளா் சண்முகம், பேரூராட்சி துணைத் தலைவா் சந்தியா ரஞ்சித்குமாா், கவுன்சிலா் நடராஜ் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியா்கள் பங்கேற்றனா்.