ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலம் அரசு மருத்துவமனையில் எலி தொல்லையைக் கட்டுப்படுத்தக் கோரி வாலிபா் சங்கத்தினா் மனு

News image
Updated On :2 ஜனவரி 2026, 8:25 pm

Syndication

சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் எலி தொல்லை அதிகமாக இருப்பதாகக் கூறி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கையில் எலிக் கூண்டு மற்றும் எலி பிடிக்கும் அட்டைகளுடன் வந்து மனு அளித்தனா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் தேவி மீனாளிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

சேலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளை அச்சுறுத்து வகையில் மருத்துவமனை வளாகம் முழுவதும் எலிகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன.

எலிகள் தொல்லையால், நோயாளிகளை பாா்க்க வரும் உறவினா்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். இதனால் நோயாளிகள் கடும் இன்னலுக்கு ஆளாவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, நோயாளிகளை அச்சுறுத்தும் எலிகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.