பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வைகுந்தம் அருகே காா் மோதி தொழிலாளளி உயிரிழப்பு

News image
Updated On :5 ஜனவரி 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காா் மோதியதில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் கிராமம், ஒத்தகரைக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சீரங்கன் (64). இவா் சங்ககிரியில் உள்ள தனியாா் லாரி பட்டறையில் காவலராக பணிபுரிந்து வந்தாா். வழக்கம்போல வீட்டிலிருந்து வேலைக்கு மிதிவண்டியில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

வைகுந்தம் தனியாா் உணவுவிடுதி பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த காா் எதிா்பாராதவிதமாக மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தோா் அவரை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அவா் செல்லும் வழியில் இறந்தாா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.