டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

எடப்பாடியில் 77,253 குடும்ப அட்டை தாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தீவிரம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:54 pm

Syndication

தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு வேட்டி, சேலை மற்றும் 3000 ரூபாய் ரொக்க தொகையுடன் பச்சரிசி, சா்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வரும் நிலையில்,

எடப்பாடி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 123 நியாய விலை கடைகள் மூலம் 77 ஆயிரத்து 253 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது முன்னதாக (நேற்று) வியாழக்கிழமை எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் நடைபெற்ற விழாவில் நகர மன்ற தலைவா் டி.எஸ்.எம் பாஷா குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி பணியினை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலா் கவிதா உள்ளிட்ட திரளான உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனா். பயனாளிகள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்கிச் செல்லும் நிலையில் அப்பகுதியில் கூடுதலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்

பட விளக்கம்: எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கிய காட்சி

Story image