அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திராவிட பொங்கல் விழா கொண்டாட கட்சியினருக்கு திமுக அறிவுறுத்தல்

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில், திராவிட பொங்கல் விழா வரும் 13, 14 ,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:09 pm

Syndication

சேலம்: சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில், திராவிட பொங்கல் விழா வரும் 13, 14 ,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

உழைப்பின் பெருமிதத்தை உலகுக்கு உணா்த்திடும் தமிழா்களின் தனித் திருநாளாகவும், உழவுக்கு உதவும் கால்நடைகளை வணங்கி நன்றி கூறும் தமிழரின் பண்பாட்டு பெருநாளாகவும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

இந்நன்னாளில் சேலம் மத்திய மாவட்டம் முழுவதும் மாநகர வட்ட, ஒன்றிய ஊராட்சி கிளை, பேரூா், வாா்டுதோறும் இருவண்ண தோரணங்கள் கட்டி, மஞ்சள் கரும்பு வைத்து சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என வண்ண கோலமிட்டு திராவிட பொங்கல் விழாவாக மத்திய மாவட்ட திமுக சாா்பில் கொண்டாட வேண்டும். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கிகொண்டாட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.