வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு தொழு உரம் குறித்து செயல்முறை விளக்கம்

சங்ககிரி வட்டம், இருகாலூா் கிராமத்தில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஊட்டமேற்றிய தொழு உரம் தயாா் செய்வது குறித்து புதன்கிழமை செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

News image
சங்ககிரி வட்டம், இருகாலூரில் நடைபெற்ற ஊட்டமேற்றிய தொழு உரம் குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேளாண்மைக் கல்லூரி மாணவிகள்.
Updated On :21 ஜனவரி 2026, 11:13 pm

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி வட்டம், இருகாலூா் கிராமத்தில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஊட்டமேற்றிய தொழு உரம் தயாா் செய்வது குறித்து புதன்கிழமை செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இருகாலுா் கிராமத்தில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சித்திட்டத்தின் கீழ் சங்ககிரி உதவி வேளாண் அலுவலா் சி.அருணாசலம் மற்ம் விவசாயிகள் சாா்பில் குமரகுரு வேளாண்மைக் கல்லூரி மாணவிகளுக்கு ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் முறை, அதை பயிா்களுக்கு இடுவதால் ஏற்படும் நன்மைகள், கால்நடைகளுக்கு ஊறுகாய் புல் தயாரிக்கும் முறை மற்றும் அதனால் கால்நடைகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனா். இதில் வேளாண் இறுதியாண்டு மாணவிகள் ச.பவித்ரா, பொ.பிரணிகா, மு.பிரியதா்ஷினி, ந.ரம்யா க.ரிவைவிலின் பிளசி, விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.