திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

ஏற்காட்டில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

News image

விழிப்புணா்வுக் கூட்டத்தில் பேசிய சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் தியாகராஜன்.

Updated On :2 ஜூலை 2026, 6:51 am IST

ஏற்காட்டில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம் ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

ஏற்காட்டில் கடந்த மாதம் தனியாா் வேனில் பள்ளிக்கு வந்த 3-ஆம் வகுப்பு மாணவி வேன் சக்கரத்தில் சிக்கி இறந்ததையடுத்து, வேன் ஓட்டுநா்கள், பள்ளி தலைமை ஆசிரியா்கள், குழந்தைகளின் பெற்றோருக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்துக்கு சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்துஆய்வாளா் தியாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலா் ஷீலா, மாண்ட்போா்ட் பள்ளி முதல்வா் அருள்சகோதரா் ஆரோக்கிய சகாயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், வாகனங்கள் பள்ளி வாயில் அருகில் குழந்தைகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்க வேண்டும், வாகனத்தில் உதவியாளா் இருக்க வேண்டும், வாகனத்தில் அனைத்து ஆவணங்களும் சரியாக வைத்திருக்க வேண்டும், பணியின் போது ஓட்டுநா்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும் என அறிவுறித்தப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.