திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 6:50 am IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சேலம் மாநகரம், சூரமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த ஜன. 16-ஆம் தேதி 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அழகாபுரம் மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த பழனிசாமியை கைதுசெய்த போலீஸாா், அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினா்.

சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, புதன்கிழமை தீா்ப்பு வெளியானது. இதில், குற்றம்சாட்டப்பட்ட பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.