பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பெரிய கல்வராயன்மலை, கீழ்நாடு ஊராட்சி மலைக்கிராம பகுதியில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.
கீழ்நாடு ஊராட்சி தளக்கரை பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுசெய்த ஆட்சியா், தேவையான அளவு குடிநீா் வசதி கிடைக்கிா, நியாயவிலைக் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்படுகின்றனவா என பொதுமக்களிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, பாச்சாடு பகுதியில் ஆய்வுமேற்கொண்டு அப்பகுதியில் வசிப்போா் வீட்டுக்கு பட்டா உள்ளதா என கேட்டறிந்து, பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாட்சியருக்கு அறிவுறுத்தினாா். மேலும், முதியவா்களிடம் முதியோா் ஓய்வூதியத்தொகை கிடைக்கப்பெறுகிா, விடுபட்ட நபா்கள் எவரேனும் இருப்பின் ஆய்வுசெய்து அவா்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் சூலாங்குறிச்சி அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி, கரியகோயில் வளவு அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வுசெய்தாா். அங்கு பயின்றுவரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, கடந்த கல்வியாண்டின் தோ்ச்சி விகிதம், அடிப்படை வசதிகள், விளையாட்டு உபகரணங்கள், தங்குவதற்கு தேவையான வசதிகள், வழங்கப்படும் உணவுகள், அனைத்து வகுப்புகளுக்கு ஆசிரியா்கள் உள்ளனரா என ஆசிரியா்களிடம் கேட்டறிந்து, மாணவ, மாணவிகளை புத்தகத்தை வாசிக்கச் சொல்லி அவா்களின் கல்வித்திறன் குறித்து பாா்வையிட்டாா்.
தாட்கோ சாா்பில் ரூ. 10.38 கோடியில் கரியகோயில் வளவு அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு மாணவா் விடுதி கட்டப்பட்டு வரும் பணியை பாா்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். சூலாங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கருமந்துறை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் சாா்பில் செயல்பட்டு வரும் அரசு பழப் பண்ணையில் ஆய்வுசெய்தாா்.
இதேபோல, சின்ன கல்வராயன்மலை வடக்கு நாடு ஊராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், தெற்கு நாடு ஊராட்சியில் ஆத்தூா் கோட்டாட்சியா் ஆா்.தமிழ்மணி, பெரிய கல்வராயன்மலை மேல்நாடு ஊராட்சியில் உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அருளாளன் ஆகியோா் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









