மேட்டூா் அனல் மின் நிலையத்தின் 2 ஆவது பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது.
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் மொத்தம் 840 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2 ஆவது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட ஒரு அலகு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதன்கிழமை, 2 ஆவது பிரிவில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பழுது நீக்கும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, வியாழக்கிழமை மீண்டும் 2 ஆவது பிரிவில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முடங்கிய உப்பூர் அனல் மின் திட்டம்! பணிகள் மீண்டும் தொடங்கப்படுமா?
மேட்டூா் அனல் மின்நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் 4-வது நாளாக போராட்டம்
கூடங்குளம் அணு உலையில் பழுது: 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

தொடரும் மின் வெட்டு: காரணமும் தீர்வும்!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



