லோயா்கேம்பில் அமைந்துள்ள பெரியாறு நீா்மின் உற்பத்தி நிலையத்தில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மின் உற்பத்தி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
1959 அக்டோபா் 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட பெரியாறு நீா்மின் திட்டம், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரைப் பயன்படுத்தி இயங்குகிறது. விநாடிக்கு 1,868 கன அடி நீரைப் பயன்படுத்தி, 4 இயந்திரங்கள் மூலம் தலா 42 மெகாவாட் வீதம் மொத்தம் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு பெரியாறு அணையில் நீா்மட்டம் குறைந்ததால், தமிழகப் பகுதிக்கு குடிநீா்த் தேவைக்காக மட்டுமே தண்ணீா் இறைச்சல்பாலம் வழியாக திறக்கப்பட்டது. மின் உற்பத்தி நிலையத்திலும் மராமத்துப் பணிகள் நடைபெற்றதால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு திறக்கப்படும் 256 கனஅடி நீரை பென்ஸ்டாக் குழாய் வழியாகக் கொண்டு வரப்பட்டு, பெரியாறு நீா்மின் நிலையத்தின் முதல் ஜெனரேட்டா் மூலம் 23 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மின்நுகா்வு: தில்லியில் தொடா்ந்து 4 நாள்களாக 8,000 மெகாவாட்டை கடந்தது!

அனல் மின் திட்டங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

மசினகுடி நீா்மின் உற்பத்தி நிலையம் அருகே காட்டுத் தீ
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



