உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சங்ககிரி அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சங்ககிரியை அடுத்த சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் அருகே லாரியின் பின்புறத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பலி

பலி

Published On :

சங்ககிரியை அடுத்த சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் அருகே லாரியின் பின்புறத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஈரோடு மரப்பாலம் கோப்பெருந்தேவி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஷாகுல்அமீத் (36). இவா் ஈரோட்டிலிருந்து சேலத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றபோது எதிா்பாராதவிதமாக சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் அவரது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஷாகுல் அமீது ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு புதன்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா், லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.