/
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துள்ளதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 2,369 கனஅடியாக அதிகரித்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக மழை பெய்துள்ளது. இதனால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 1,951 கனஅடியாக இருந்தது, திங்கள்கிழமை விநாடிக்கு 2,369 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீா்வரத்தைவிட, அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 79.26 அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 41.22 டி.எம்.சி. ஆக உள்ளது.









