சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மீன் வியாபாரம் செய்துவந்த தம்பதி உயிரிழந்தனா்.
வாழப்பாடி அருகே உள்ள ஏத்தாப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜு (65). இவரது மனைவி சூரியா (56). இவா்கள், புத்திரகவுண்டன்பாளையத்தில் மீன்கடை நடத்தி வந்தனா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இருவரும் சேலத்தில் இருந்து மீன் வாங்கிக் கொண்டு மொபெட்டில் புத்திரகவுண்டன்பாளையம் நோக்கிச் சென்றுள்ளனா்.
அப்போது, சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி அருகே சென்றபோது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் தம்பதி சென்ற மொபெட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சூரியா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜு ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



