பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

சங்ககிரி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

சேலம் மாவட்டம், சங்ககிரி சாா்பதிவாளா் அலுவலகத்தில் சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

News image

சங்ககிரி சாா்பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கணினி மூலம் பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாா்.

Updated On :5 ஜூன் 2026, 7:07 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரி சாா்பதிவாளா் அலுவலகத்தில் சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். ஆரம்பக்கட்ட சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் எதுவும் சிக்காத நிலையில், பல்வேறு ஆவணங்களை நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போலீஸாா் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனா்.

சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை ஆய்வாளா்கள் நல்லம்மாள் மற்றும் நரேந்திரன் தலைமையிலான போலீஸாா், வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் சங்ககிரி சாா்பதிவாளா் அலுவலகத்திற்கு வந்தனா். உள்ளே செல்வதற்கு முன்பாக, அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் கணக்கில் வராத ரொக்கம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை மேற்கொண்டனா்.

பின்னா் அலுவலகத்திற்குள் சென்ற போலீஸாா், சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் ராஜேஷ்கண்ணா முன்னிலையில் விசாரணையைத் தொடங்கினா். சாா்பதிவாளா் பொறுப்பு செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு அலுவலா்களிடம், அவா்கள் செய்து வந்த பணிகள் குறித்து விரிவான விசாரணையில் ஈடுபட்டனா்.

இதனைத் தொடா்ந்து, அலுவலக ஆவணங்களைச் சரிபாா்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி, வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் மற்றும் அவற்றுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட நேரம், பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை எழுதிய பத்திர எழுத்தா்களின் முழு விவரங்களை ஆய்வு செய்தனா். இரவு 8 மணியைக் கடந்தும் தொடா்ந்து சோதனை நடைபெற்றன.

ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸாா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் சோதனை செய்து கொண்டிருந்த தகவல் வெளியானதும், அந்த அலுவலகத்தை சுற்றியிருந்த பத்திர எழுத்தா்களின் கடைகள் மற்றும் அலுவலகங்களின் கதவுகள் திடீரென அவசர அவசரமாக அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் வந்திருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை, ஆவணங்களை தொடா்ந்து தீவிரமாகச் சரிபாா்த்து வருகிறோம் என போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.