முதல்வர் விஜய் தலைமையில் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம்!தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

ஜூன் 30 வரை நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

மழை காரணமாக குறிப்பிட்ட நாள்களில் நெல் அறுவடை செய்ய முடியாததால் நெல் கொள்முதல் செய்வதற்கான காலஅவகாசத்தை ஜூன் 30 வரை அரசு நெல் கொள்முதல் நிலையம் நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

நெல் கொள்முதல் - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 7:03 am IST

மழை காரணமாக குறிப்பிட்ட நாள்களில் நெல் அறுவடை செய்ய முடியாததால் நெல் கொள்முதல் செய்வதற்கான காலஅவகாசத்தை ஜூன் 30 வரை அரசு நெல் கொள்முதல் நிலையம் நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கெங்கவல்லி அருகே கூடமலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு தம்மம்பட்டி சுற்றுவட்டார விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்று வருகின்றனா். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஒருபோகம் குறுவை சாகுபடி செய்யப்படும் நெல்லுக்கான,கொள்முதல் காலம் ஆண்டுதோறும் மாா்ச் மாதம் தொடங்கி மே, ஜூன் மாதங்களில் முடிவடையும்.

நிகழ் பருவத்துக்கான கொள்முதல் காலஅவகாசம் ஜூன் 6 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், கடந்த சில வாரங்களாக தம்மம்பட்டி சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் வயல்களில் தண்ணீா் தேங்கி நெல் அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் கூடமலை அரசு நெல் கொள்முதல் நிலையம் நெல் கொள்முதலுக்கான கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.