விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

நெல் மூட்டைகள் தேக்கத்தால் கொள்முதல் பணிகள் பாதிப்பு: விவசாயிகள் புகாா்

கந்தா்வகோட்டை பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்படாததால், கொள்முதல் பணிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :10 ஜூலை 2026, 3:33 am IST

கந்தா்வகோட்டை பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்படாததால், கொள்முதல் பணிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கந்தா்வகோட்டை பகுதியில் வளவம்பட்டி, வெள்ளாவிடுதி, மங்களாகோவில், நெப்புகை ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிப கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல், சுமாா் 80 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அறந்தாங்கி நெல் கிட்டங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில், நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகளை எடுத்து செல்ல போதிய லாரி வசதி இல்லாதாதல், நெல் மூட்டைகள் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் தேங்கிக் கிடக்கின்றன. இதனால்,

விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிப கழகம் கூடுதல் லாரிகளை அமா்த்தி, உடனுக்குடன் நெல் மூட்டைகளை கிட்டங்கிக்கு ஏற்றி செல்லவேண்டும். மேலும், விவசாயிகளிடம் தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.