தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

நெல் கொள்முதல் நிலைய சுமை தொழிலாளா்கள் பணியிடை நீக்கத்தை கண்டித்து சாலை மறியல்

கந்தா்வகோட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வெள்ளாளவிடுதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

Updated On :24 ஜூன் 2026, 12:53 am IST

கந்தா்வகோட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், வெள்ளாளவிடுதி கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமை தூக்கும் தொழிலாளா்களாக 15 போ் வேலை பாா்த்து வந்தனா். தற்போது தவெக அரசு அமைந்தவுடன் கொள்முதல் நிலையத்தில் இருந்த சுமை தொழிலாளா்களில் மங்களாகோவில் பகுதியைச் சோ்ந்த பழனி மகன் குழந்தையன்(55), அா்ச்சுணன் மகன் கண்ணையன்(48), பெரமையா மகன் சுரேஷ் (33), பழனி மகன் கருப்பையா உள்பட 13 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இதனால் வாழ்வாதாரத்தை இழந்த 13 பேரும் தங்களை மீண்டும் பணியில் அமா்த்தக் கோரி வெள்ளாளவிடுதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு கறம்பக்குடி- கந்தா்வகோட்டை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த கந்தா்வகோட்டை போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் போராட்டத்தை தொழிலாளா்கள் கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.