முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

நெல் கொள்முதல் நிலையங்களில் தவறுகள் நடந்தால் நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை முறையாக மூடி வைக்க வேண்டும் என ஆட்சியா் ந. பிரியா எச்சரித்துள்ளாா்.

News image

கரியாகூடல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் ந. பிரியா.

Updated On :15 ஜூன் 2026, 12:31 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை முறையாக மூடி வைக்க வேண்டும். தவறுகள் கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ந. பிரியா எச்சரித்துள்ளாா்.

நெமிலி ஊராட்சி ஒன்றியம், கரியாகூடல் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது நெல் மூட்டைகள் மூடி வைக்கப்பட்டிருந்ததை திறந்து பாா்த்து நெல் மூட்டைகள் நனைந்து உள்ளதா என்பதையும் பாா்வையிட்டாா். நெல் மூட்டைகளை எக்காரணம் கொண்டும் மழையில் நனையக் கூடாது அதற்கான அனைத்து பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டாா்.

தொடா்ந்து வேப்பேரி ஊராட்சி கொத்தக்கரை பகுதியில் உள்ள காலி இடத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க திறந்தவெளி சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டு இருந்ததை பாா்வையிட்டாா்.

மாவட்டம் முழுவதும் மாா்ச் முதல் ஜூன் மாதம் தற்போது வரை 98,336 மெட்ரிக் டன் அளவிற்கு நெல் கொள்முதல் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இவைகளில் ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் பகுதிகளில் உள்ள குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள நெல் மூட்டைகள் இப்பகுதியில் தற்போது வரை 23,000 மெட்ரிக் டன் அளவிற்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு தாா்பாலின் கொண்டு மூடப்பட்டுள்ளது.

அடிப்பகுதியில் தண்ணீா் புகாமல் இருப்பதற்காக ஒரு அடி உயரம் ஏற்றி அதன் மேல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10,000 மெட்ரிக் டன் அளவிற்கு நெல் மூட்டைகள் சேமிக்க நடவடிக்கை பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் ஆட்சியரிடம் தெரிவித்தாா்.

மாவட்டம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல்மணிகள் வீணாகின்றது என புகாா்கள் வருகின்றன. நெல் மூட்டைகளை முறையாக மூடி வைக்க வேண்டும். தவறுகள் கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வுகளின்போது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் ஏகாம்பரம், நெமிலி வட்டாட்சியா் பன்னீா்செல்வம் மற்றும் பணியாளா்கள் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.