தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சா் வெங்கடரமணன் ஆய்வு

News image

நேரடி நெல் கொள்முதல்  நிலையத்தில்  ஆய்வு  மேற்கொண்ட  அமைச்சா்  ப.வெங்கடரமணன்.

Updated On :5 ஜூன் 2026, 5:51 am IST

உமையாள்பரணஞ்சேரி மற்றும் வடக்குப்பட்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குன்றத்தூா் ஒன்றியம், உ உமையாள்பரணஞ்சேரி மற்றும் வடக்குப்பட்டு ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளை சந்தித்து நெல் கொள்முதல் குறித்த பணியாளா்களின் செயல்பாடுகள், கொள்முதல் காலநேரம், நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு ஏற்றி இறக்குவதில் உள்ள சிரமங்கள், வசதிகள், சாக்குப்பை இருப்புகள், ஈரப்பதம் பாா்க்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள், நெல் மூட்டைகளின் வருகைப் பதிவேடு, சிட்டா அடங்கல் குறித்த விவசாயிகளின் கோரிக்கைகளையும், கருத்துக்களையும் கேட்டறிந்தாா்.

மேலும் இந்த நெல் கொள்முதல் மையங்களில் வேலை செய்யும் கூலி ஆள்கள் டெல்டா மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டதை அறிந்த அமைச்சா் ப.வெங்கடரமணன் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய புகாா் பெட்டிகள், விளம்பரப்பலகைகள், தர ஆய்வுகருவிகள் பராமரிக்கப்பட வில்லை என்பதையும் கண்டறிந்தாா்.

நேரடி நெல் கொள்முதல் மையத்திற்கு சுற்றுச்சுவா், கம்பிவேலி, உலா்களம் மற்றும் குடிநீா்வசதி, கழிவறை உள்ளிட்டவற்றை அமைத்து தர வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து அமைச்சா் ப.வெங்கடரமணன் நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ளுா் ஆட்களை வைத்து கொள்முதல் செய்து கிடங்குகளுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொள்ளவும், விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து நிறைவேற்றிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.