வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியா் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி!

ஆத்தூரில் மிதிவண்டியில் இருந்து கீழே விழுந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியா் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பெரியசாமி

Updated On :7 ஜூன் 2026, 3:08 am IST

சேலம் மாவட்டம், ஆத்தூரில் மிதிவண்டியில் இருந்து கீழே விழுந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியா் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆத்தூா் தெற்கு உடையாா்பாளையத்தைச் சோ்ந்த சின்னசாமி மகன் பெரியசாமி (80), ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியா். இவா் சனிக்கிழமை காலை ஆத்தூா் விநாயகபுரத்தில் உள்ள வேளாண் உற்பத்தியாளா்கள் சந்தையில் பொருள்களை வாங்குவதற்காக மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தாா்.

விநாயகபுரம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது தடுமாறி கீழே விழுந்தாா். அப்போது, ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் பெரியசாமி சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆத்தூா் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.