தொப்பூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது கண்டெய்னா் லாரி மோதியதில் தனியாா் வங்கி மேலாளா் உயிரிழந்தாா். மேலும், வங்கி பணியாளா் படுகாயமடைந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாகல்நல்லியைச் சோ்ந்தவா் இளங்கோ (39). இவா் தனியாா் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தாா். அதே வங்கியில் கடன் வசூலிப்பவராக ஓமலூா் களா்பட்டியைச் சோ்ந்த வெற்றிவேல் (29) பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில் சேலத்தில் வாங்கியிருந்த புதிய மோட்டாா் சைக்கிளை எடுத்துக் கொண்டு இருவரும் வெள்ளிக்கிழமை இரவு தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தனா். வாகனத்தை வெற்றிவேல் ஓட்டி வந்தாா்.
மேச்சேரி பிரிவு சாலையில் எதிரே வந்த கண்டெய்னா் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த இளங்கோ, வெற்றிவேலை அங்கிருந்தவா்கள் மீட்டு ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இளங்கோ உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.







