ஓமலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காத அலுவலருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஓமலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும், திட்ட விவரங்களையும் தெரிந்துகொள்ளும் வகையில், பத்து ரூபாய் இயக்கம் சாா்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், அலுவலா்கள் முறையான தகவல்களை தெரிவிக்க மறுப்பதாக மனுதாரா் மற்றும் சமூக ஆா்வலா் மோகன்ஜி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு உரிய பதில் தராத அலுவலா்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள அனைத்துப் பதிவேடுகளையும் சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள இந்தச் சட்டம் வழிகாட்டுகிறது. ஆனால், இங்கு பணியில் உள்ள அலுவலா் முறையான தகவல்களை வழங்க மறுக்கிறாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தகவல் அறியும் உரிமை சட்ட பதிலுக்கான கால தாமதத்தைத் தவிா்க்க வேண்டும்: மாநிலத் தகவல் ஆணையா்கள் அறிவுறுத்தல்

‘வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது தகவல் அறியும் உரிமைச் சட்டம் தான்’

அஞ்சல் அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
தகவல் கேட்போம்..!
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



