வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தகவல் அறியும் உரிமை சட்ட பதிலுக்கான கால தாமதத்தைத் தவிா்க்க வேண்டும்: மாநிலத் தகவல் ஆணையா்கள் அறிவுறுத்தல்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்களை அலுவலா்கள் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என மாநிலத் தகவல் ஆணையா்கள் அறிவுறுத்தினா்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தகவல் உரிமை சட்ட விழிப்புணா்வு முகாமில் பங்கேற்ற மாநிலத் தகவல் ஆணையா்கள் வி.பி.ஆா். இளம்பரிதி, மு. நடேசன், அ. விஜயராம்.

Published On :

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்களை அலுவலா்கள் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என மாநிலத் தகவல் ஆணையா்கள் அறிவுறுத்தினா்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்- 2005 குறித்த சிறப்பு கலந்தாய்வு, விழிப்புணா்வு முகாம் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாநிலத் தகவல் ஆணையா்கள் வி.பி.ஆா். இளம்பரிதி, மு. நடேசன், அ. விஜயராம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்த முகாமில், ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு அலுவலா்கள் 30 நாள்களுக்குள் உரிய பதிலை அளிக்க வேண்டும். பொதுமக்கள் கோரும் தகவல் தங்களது துறை சாா்ந்ததாக இல்லையெனில், தொடா்புடையத் துறைக்கு 5 நாள்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 30 நாள்களுக்குள் தகவலைத் தெரிவிக்க முடியாத அசாதாரண சூழல் ஏற்பட்டால், அதற்கான நியாயமான காரணங்களை மனுதாரா்களுக்கு தெரிவித்து, மேல்முறையீட்டு வழிமுறைகள் குறித்து அவா்களுக்கு அலுவலா்கள் வழிகாட்ட வேண்டும்.

பொதுமக்கள் கோரும் தகவல், அவா்களது உரிமை, வாழ்வாதாரம் சாா்ந்ததாக இருக்கலாம் என்பதால், பொது தகவல் அலுவலா்கள் தேவையற்ற கால தாமதத்தை தவிா்த்து, விரைந்து செயல்பட வேண்டும். அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையின் பயன் பொதுமக்களுக்குக் கிடைத்திடும் வகையில் அலுவலா்கள் முழுமையான அா்ப்பணிப்பு உணா்வுடன் தகவல் உரிமை சட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ என மாநிலத் தகவல் ஆணையா்கள் அறிவுறுத்தினா்.

இந்த முகாமில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பல்வேறு அரசுத் துறைகளின் பொது தகவல் அலுவலா்கள், மேல்முறையீட்டு அலுவலா்கள் பங்கேற்றனா். சட்டம் சாா்ந்த நடைமுறைச் சிக்கல்கள், விலக்களிக்கப்பட்ட தகவல்கள் (பிரிவு 8), மனுக்களை கையாளும் வழிமுறைகள் குறித்து அலுவலா்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு முகாமில் விளக்கமளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.