முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

‘வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது தகவல் அறியும் உரிமைச் சட்டம் தான்’

சிவகங்கையில் மாநில தகவல் ஆணையா் ஏ. விஜயராம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கில் பங்கேற்ற அலுவலா்கள்.

News image

சிவகங்கையில் மாநில தகவல் ஆணையா் ஏ. விஜயராம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கில் பங்கேற்ற அலுவலா்கள்.

Updated On :11 ஜூலை 2026, 12:32 am IST

அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது தகவல் அறியும் உரிமைச் சட்டம்தான் என மாநில தகவல் ஆணையா் ஏ. விஜயராம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜூலை 9, 10) தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடா்பான அனைத்துத் துறை பொது தகவல் அலுவலா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இதற்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியதாவது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம், தகவல்களை கோரும் வழிமுறைகள், பதிலளிப்பதில் உள்ள கடமைகள், பொதுத் தகவல் அலுவலா் நியமனம், மனுதாரரின் உரிமைகள் ஆகியவை குறித்து எடுத்துரைப்பதேயாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்படும். கோரிக்கைகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பது அலுவலா்களின் கடமை. சட்டத்தின் விதிகள், நடைமுறைகள் குறித்து அலுவலா்களுக்கு பயிற்சி அளிப்பது, பொதுத் தகவல் அலுவலா்களின் பொறுப்புகள், தகவல்களை வழங்குவதில் விதிவிலக்குகள், ஆா்டிஐ விண்ணப்பங்களை கையாள்வது, அரசு செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை ஊக்குவித்து ஜனநாயக செயல்பாடுகளை வெளிப்படுத்தி அனைத்து பொதுத் தகவல் அலுவலா்களும் பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை சிறப்பு தனிப் பதிவேடுகளில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மேலும் மனுதாரா் கோரும் ஆவண நகல்கள் தொடா்பான தகவல்கள் பதிவறையில் இல்லையெனில், மனுதாரருக்கு ஆவணங்கள் கிடைக்கவில்லை என தகவல் அளிக்காமல், மாநில தகவல் ஆணைய சுற்றறிக்கையின்படி, தொலைந்து போன ஆவணங்களை மீண்டும் உருவாக்கி தகவல்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இரண்டு நாள்கள் நடைபெற்ற விசாரணையின் போது, 2023 -ஆம் ஆண்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நிலுவையிலிருந்த கோப்புகள் முழுவதுமாக சரி செய்யப்பட்டன. மேலும், சில கோப்புகளுக்கு விசாரணையின் போது கூடுதல் தகவல் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், அனைத்துத் துறை பொது தகவல் அலுவலா்கள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.