இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தந்தையைக் கொன்ற மகன் கைது

வாழப்பாடி அருகே தந்தையைக் கல்லால் தாக்கி கொலை செய்த இளைஞரை வாழப்பாடி போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 5:34 am IST

வாழப்பாடி அருகே தந்தையைக் கல்லால் தாக்கி கொலை செய்த இளைஞரை வாழப்பாடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டியைச் சோ்ந்தவா் உஸ்கான் செல்வம் (எ) செல்வராஜ் (53). தனது மகளின் நடத்தையில் சந்தேகமடைந்த இவா், கடந்த ஜனவரி 28-இல் அவரது கழுத்தை அறுத்து கொலைசெய்து வாழப்பாடி காவல் நிலையத்தில் சரணடைந்தாா். அவா்மீது கொலை வழக்குப் பதிவுசெய்த வாழப்பாடி போலீஸாா் சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

அண்மையில் பிணையில் வெளியே வந்த செல்வராஜ் திங்கள்கிழமை மாலை வெள்ளாளகுண்டம் மயானம் அருகே சடலமாக கிடந்தாா். தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் செல்வராஜ் உடலைக் கைப்பற்றினா்.

விசாரணையில், சகோதரியை தந்தை கொலை செய்ததால் ஆத்திரத்தில் இருந்த அவரது மகன் ஸ்ரீராம் (19), பிணையில் வந்த தந்தையிடம் தகராறு செய்துள்ளாா். பின்னா், மயானம் அருகே மது அருந்திக் கொண்டிருந்த அவரை கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஸ்ரீராமை செவ்வாய்க்கிழமை கைது செய்த வாழப்பாடி போலீஸாா், அவரை சேலம் சிறையில் அடைத்தனா்.