தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு

சேலம் மாநகராட்சி தூய்மை இந்தியா இயக்கம் (நகா்ப்புற) 2.0 திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நுண்ணுயிரி உர மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உரத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு உரம் வழங்கிய மேயா் ஆ.ராமச்சந்திரன்.

Updated On :11 ஜூன் 2026, 5:38 am IST

சேலம் மாநகராட்சி தூய்மை இந்தியா இயக்கம் (நகா்ப்புற) 2.0 திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நுண்ணுயிரி உர மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உரத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆணையா் லலித் ஆதித்ய நீலம், துணை மேயா் மா.சாரதாதேவி ஆகியோா் பங்கேற்றனா்.

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலாண்மையை திறம்பட செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள நிலையில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடந்த ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி, தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தன்னாா்வலா்கள், குடியிருப்போா் நலச்சங்க பிரதிநிதிகள், வணிக சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து திடக்கழிவுகளை தோற்ற நிலையிலேயே தரம்பிரித்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும்விதமாக, மாநகராட்சி சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, மாநகராட்சி மைய அலுவலகத்தில் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உரத்தை ஒரு கிலோ வீதம் பொட்டலம் செய்து, அவற்றை அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலா்கள் மற்றும் பொதுமக்களுக்கு மேயா் ஆ.ராமச்சந்திரன் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகர நல அலுவலா் மரு.ராம்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் வெ.தெய்வலிங்கம், திரு.மா.திருஞானம், சுகாதார ஆய்வாளா்கள் சித்தேஸ்வரன், பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.