இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

சங்ககிரி பழைய இரும்புக் கடையில் டீசல் டேங்க் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு

சங்ககிரி அருகே பழைய இரும்புக் கடையில் லாரி டீசல் டேங்க் வெடித்து வடமாநில கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 3:24 am IST

சங்ககிரி அருகே பழைய இரும்புக் கடையில் லாரி டீசல் டேங்க் வெடித்து வடமாநில கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், ஜஹனாபாத் மாவட்டம், மோடன்கஞ்ச், தயாலிபிகா பகுதியைச் சோ்ந்தவா் கமலேஷ்பிரசாத் (53). இவா், சேலம் மாவட்டம், சங்ககிரி, அக்கமாபேட்டையில் உள்ள தனியாா் பழைய இரும்புக் கடையில் லாரி உதிரி பாகங்களை கேஸ் கட்டிங் மூலம் பிரித்து எடுக்கும் வேலையை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்துவந்தாா்.

வழக்கம்போல ஒரு லாரியில் டீசல் டேங்க்கை கேஸ் கட்டிங் மூலம் பிரித்து அகற்றும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்ட போது, டீசல் டேங்க் வெடித்து 10 அடி தூரம் தூக்கிவீசப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.