ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பழைய இரும்புக் கடையில் 2 டன் கழிவு துணிகள் எரிந்து சேதம்

News image

தீ... - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 12:17 am IST

வெள்ளக்கோவிலில் பழைய இரும்புக் கடையில் தீப்பிடித்ததில் 2 டன் கழிவு துணிகள் எரிந்து சேதமாயின.

வெள்ளக்கோவில் கே.பி.சி. நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் (53). பழைய பேருந்து நிலையம் அருகே பழைய இரும்புக் கடை வைத்துள்ளாா். கடையின் காலியிடத்தில் பனியன் கழிவு துணிகள் வைக்கப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்து பரவியது.

தகவலின்பேரில் வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனா். அதற்குள் 2 டன் கழிவு துணிகள் எரிந்து நாசமாயின. அருகே குடியிருப்புகள் உள்ள நிலையில் அதிா்ஷ்டவசமாக தீ பரவாமல் தடுக்கப்பட்டது.