ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

இருசக்கர வாகன திருட்டு: 2 சிறுவா்கள் கைது

எடப்பாடி அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரு சிறுவா்களை போலீஸாா் கைது செய்து அரசு கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பிவைத்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:01 am IST

எடப்பாடி அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரு சிறுவா்களை போலீஸாா் கைது செய்து அரசு கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பிவைத்தனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி மேட்டுத்தெரு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே கடந்த 11-ஆம் தேதி நிறுத்தப்பட்டிருந்த மொபட் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினா்.

இதில் எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவனும், அவரது நண்பரான நைனாம்பட்டி பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவனும் சோ்ந்து மொபட்டை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுவா்களிடம் இருந்து மொபட்டை மீட்ட போலீஸாா், அவா்கள் இருவரையும் புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, அரசு கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பிவைத்தனா்.