எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

தம்மம்பட்டியில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :19 ஜூன் 2026, 6:04 am IST

தம்மம்பட்டியில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் குறித்த பொதுநல வழக்கில் தெருநாய்களுக்கு உணவு வழங்குவதுடன், அவைகளுக்கு கருத்தடை செய்து, ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டுமென உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் தெருநாய்களை பிடித்து, அவைகளுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியில் உள்ளாட்சி அமைப்பின் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

வலைகள் மூலம் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, தம்மம்பட்டி அரசு கால்நடை மருந்தகத்தில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வியாழக்கிழமைவரை 20 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் பேரூராட்சி பணியாளா்கள் தெரிவித்தனா்.