சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

தம்மம்பட்டியில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நாய் - கோப்புப்படம்.

Published On :19 ஜூன் 2026, 6:04 am IST

தம்மம்பட்டியில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் குறித்த பொதுநல வழக்கில் தெருநாய்களுக்கு உணவு வழங்குவதுடன், அவைகளுக்கு கருத்தடை செய்து, ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டுமென உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் தெருநாய்களை பிடித்து, அவைகளுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியில் உள்ளாட்சி அமைப்பின் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

வலைகள் மூலம் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, தம்மம்பட்டி அரசு கால்நடை மருந்தகத்தில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வியாழக்கிழமைவரை 20 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் பேரூராட்சி பணியாளா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.