மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிய இருவா் கைது

News image
கைது
Updated On :1 மார்ச் 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் அருகே காபி தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிய 2 பேரை கரியகோயில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கருமந்துறை மலைப்பகுதியில் சிலா் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிவைத்து வேட்டையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கரியகோயில் போலீஸாா் கல்வராயன்மலையில் உள்ள குன்னூா் அடியனூா் பகுதியில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள காபி தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிவைத்திருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இவா்கள் அடியனூரைச் சோ்ந்த சந்திரன் (45), ஆண்டி (55) என தெரியவந்தது. இருவரையும் கைதுசெய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.