ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிய இருவா் கைது

News image
கைது
Updated On :1 மார்ச் 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் அருகே காபி தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிய 2 பேரை கரியகோயில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கருமந்துறை மலைப்பகுதியில் சிலா் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிவைத்து வேட்டையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கரியகோயில் போலீஸாா் கல்வராயன்மலையில் உள்ள குன்னூா் அடியனூா் பகுதியில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள காபி தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிவைத்திருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இவா்கள் அடியனூரைச் சோ்ந்த சந்திரன் (45), ஆண்டி (55) என தெரியவந்தது. இருவரையும் கைதுசெய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.