சேலம் அருகே காபி தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிய 2 பேரை கரியகோயில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கருமந்துறை மலைப்பகுதியில் சிலா் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிவைத்து வேட்டையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கரியகோயில் போலீஸாா் கல்வராயன்மலையில் உள்ள குன்னூா் அடியனூா் பகுதியில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள காபி தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கிவைத்திருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இவா்கள் அடியனூரைச் சோ்ந்த சந்திரன் (45), ஆண்டி (55) என தெரியவந்தது. இருவரையும் கைதுசெய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது

கடற்படை ரகசிய தகவல் கசிவு வழக்கு: 4-ஆவது குற்றவாளி கைது

வீட்டில் கஞ்சா பதுக்கிய பெண் கைது
மதுபாட்டில்கள் பதுக்கிய 2 போ் கைது
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

