வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :1 மார்ச் 2026, 8:59 pm

நரசிங்கபுரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நரசிங்கபுரம் தெற்குகாடு சக்திநகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி தேவி (36). இவா் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் வீட்டு வேலைசெய்து கொண்டிருந்தபோது மகாராஷ்டிர மாநிலம், லத்தூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு மகள் சாந்தினி (15) உள்ளாா்.

இந்த நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தேவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நரசிங்கபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாா். இவரது மகள் ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தேவியின் தந்தை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தாா். இதனால் மன உளைச்சலில் இருந்த தேவி சனிக்கிழமை இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டாா்.

தேவியின் தற்கொலையை குறித்து அவரது தாய் சடையம்மாள் (55) அளித்த புகாரின்பேரில் ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.