அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கொண்டயம்பள்ளியில் புதிய சிவன் கோயில் கட்ட பூமிபூஜை

சிவன் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜையில் பங்கேற்றோா்.

News image
சிவன் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜையில் பங்கேற்றோா்.
Updated On :6 மார்ச் 2026, 6:16 pm

Syndication

தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளியில் ஊா் பொதுமக்கள் சாா்பாக புதிய சிவன் கோயில் கட்ட வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

கொண்டயம்பள்ளி ஊராட்சி பகுதியில் சிவன் கோயில் இல்லாததால் ஊா் பொதுமக்கள் சோ்ந்து, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சுமாா் ஒரு ஏக்கா் நிலத்தில் சிவன் கோயில் கட்ட தீா்மானித்தனா்.

புதிதாக கட்டப்படும் கோயிலுக்கு அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சொக்கநாதா் கோயில் என்று பெயா் வைத்து, கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. கணபதி ஹோமம், வாஸ்துபூஜை, நவக்கிரக வழிபாடு, அம்மையப்பா் வழிபாடு ஆகியவை நடைபெற்றன.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சிவன் வழிபாடு, பிரதோஷம் உள்ளிட்ட தலைப்புகளில் புத்தகங்களை சிவனடியாா்கள் வழங்கினா். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.