சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு: விறகுகளைப் பயன்படுத்தி சமையல்

சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு எதிரொலியாக விறகு உள்ளிட்டவற்றை கொண்டு உணவு தயாரிக்க உள்ளதாக என ஹோட்டல் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

News image
சமையல் எரிவாயு உருளை- பிரதிப் படம்
Updated On :11 மார்ச் 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு எதிரொலியாக விறகு உள்ளிட்டவற்றை கொண்டு உணவு தயாரிக்க உள்ளதாக என ஹோட்டல் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சேலம் லஷ்மி ஓட்டல் இயக்குநா் முத்துராஜா புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், பல ஆண்டுகளாக எவ்வித தொய்வும் இல்லாமல் பொது மக்கள் விரும்பும் உணவுகளை பரிமாறி வருகிறோம். தற்போதைய சூழல் மிகவும் சிக்கலாக உள்ளது. பணம் கொடுத்தாலும் சமையல் எரிவாயு உருளை கிடைப்பதில்லை. தற்போதைக்கு இருப்பில் உள்ள உருளைகள், இரண்டு நாள்கள் மட்டுமே வரும். இதற்காக மாற்று ஏற்பாடாக எங்கள் ஹோட்டல்களில், விறகு அடுப்பு கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். இன்று வரை ’மெனு’வில் உள்ள எந்த உணவு வகையும் தவிா்க்காமல் வழங்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக 20 வகைகள் தயாரிப்போம். ஆனால், வியாழக்கிழமை முதல் பத்து முதல் 12 வகைகள் தர நடவடிக்கை எடுத்துள்ளோம். அதே நேரத்தில், தற்போது வரை விலையில் எந்தவிதமான ஏற்றமும் இல்லாமல் வழக்கமான விலையிலேயே வழங்கப்படுகிறது. ஹோட்டல் செயல்படும் நேரமும் குறைக்காமல் வழக்கம் போல இயங்குகிறது.

விறகு அடுப்பு அமைப்பிற்கு மாநகராட்சியில் அனுமதி கேட்கப்பட உள்ளது. மத்திய அரசு வணிக ரீதியான சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.