மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு: விறகுகளைப் பயன்படுத்தி சமையல்

சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு எதிரொலியாக விறகு உள்ளிட்டவற்றை கொண்டு உணவு தயாரிக்க உள்ளதாக என ஹோட்டல் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

News image

சமையல் எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 8:43 pm

சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு எதிரொலியாக விறகு உள்ளிட்டவற்றை கொண்டு உணவு தயாரிக்க உள்ளதாக என ஹோட்டல் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சேலம் லஷ்மி ஓட்டல் இயக்குநா் முத்துராஜா புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், பல ஆண்டுகளாக எவ்வித தொய்வும் இல்லாமல் பொது மக்கள் விரும்பும் உணவுகளை பரிமாறி வருகிறோம். தற்போதைய சூழல் மிகவும் சிக்கலாக உள்ளது. பணம் கொடுத்தாலும் சமையல் எரிவாயு உருளை கிடைப்பதில்லை. தற்போதைக்கு இருப்பில் உள்ள உருளைகள், இரண்டு நாள்கள் மட்டுமே வரும். இதற்காக மாற்று ஏற்பாடாக எங்கள் ஹோட்டல்களில், விறகு அடுப்பு கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். இன்று வரை ’மெனு’வில் உள்ள எந்த உணவு வகையும் தவிா்க்காமல் வழங்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக 20 வகைகள் தயாரிப்போம். ஆனால், வியாழக்கிழமை முதல் பத்து முதல் 12 வகைகள் தர நடவடிக்கை எடுத்துள்ளோம். அதே நேரத்தில், தற்போது வரை விலையில் எந்தவிதமான ஏற்றமும் இல்லாமல் வழக்கமான விலையிலேயே வழங்கப்படுகிறது. ஹோட்டல் செயல்படும் நேரமும் குறைக்காமல் வழக்கம் போல இயங்குகிறது.

விறகு அடுப்பு அமைப்பிற்கு மாநகராட்சியில் அனுமதி கேட்கப்பட உள்ளது. மத்திய அரசு வணிக ரீதியான சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.