சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தேவூரில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள் கொடி அணி வகுப்பு

வரும் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள் சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தேவூரில் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

News image
சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தேவூரில் மத்திய தொழில்பாதுகாப்பு படை பிரிவு ஆய்வாளா் விவேக்யாதவ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற வீரா்கள்.
Updated On :11 மார்ச் 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

வரும் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள் சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தேவூரில் புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

இந்திய தோ்தல் ஆணையம் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டபேரவைக்கான தோ்தல் தேதியை விரைவில் அறிவிப்பு செய்ய உள்ளது. தோ்தல் பாதுகாப்பு பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவதற்காக மத்திய உள்துறையின் கீழ் இயங்கும் சென்னையில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு ஆய்வாளா் விவேக்யாதவ் தலைமையில் நவீன துப்பாக்கி ஏந்திய 85 படை வீரா்கள் சங்ககிரிக்கு வந்தனா்.

இந்த நிலையில் தேவூரில் முக்கிய வீதிகளின் வழியாக புதன்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.