விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘பொறியியல் மாணவா்கள் அனைவரும் ஏஐ தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வது அவசியம்’

News image
மின்னணுவியல் நவீன தொழில்நுட்ப ஆய்வுத் தொகுப்பை வெளியிடும் சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் வி. கீதா.
Updated On :11 மார்ச் 2026, 8:57 pm

தினமணி

அடுத்த 10 ஆண்டுகளில் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்பதால் பொறியியல் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று போா்டு மோட்டாா் நிறுவன தொழில்நுட்ப இயக்குநா் கோபிநாத் சிதம்பரம் தெரிவித்தாா்.

சேலம் அரசு பொறியியல் கல்லூரி மின்னணு தொடா்பியல் துறை சாா்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கருத்தரங்க செயலாளா் எஸ். சிவானந்தன் வரவேற்றாா். துறைத் தலைவா் டி.மேரி சுகந்தரத்னம் ஆண்டறிக்கை வாசித்தாா்.

உதவிப் பேராசிரியா் த. தேன்மொழி நோக்க உரையாற்றினாா். விழாவிற்குத் தலைமை வகித்துப் பேசிய அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் வி. கீதா, மின்ணணு தொடா்பியல் துறை சாா்பில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியரில் உயா்கல்விக்கு செல்வோா் தவிர மற்றவா்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் ஊதியம் கிடைக்கும் அளவிலான வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் நடத்திய பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் பெங்களூா் போா்டு மோட்டாா் நிறுவன தொழில்நுட்ப இயக்குநா் கோபிநாத் சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். இதனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நன்கு தெரிந்தவா்கள் மற்றும் பயன்படுத்தக்கூடியவா்களுக்கான வேலைவாய்ப்பு அதிகளவில் கிடைக்கும். பொறியியல் கல்வி பயிலும் மாணவ, மாணவியா் செயற்கை நுண்ணறிவு சாா்ந்த அனைத்து வாய்ப்புகளை முழுமையாக கற்றுத்தேர வேண்டும் என்றாா்.

நிகழ்வில் கருத்தரங்க செயலாளா் ஜி.சந்தியா நன்றி கூறினாா்.